பதவி விலகுகின்றாரா பிரதமர் ரணில்?

0
336

அனுர குமாரவிடம் உள்ள திட்டம் சாதகமாக இருக்குமானால், பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கு தான் தயார் ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே அவர்’ இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் கடன் மீளமைப்பு அறிக்கை ஓகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கப்படவுள்ளது. ஆட்சியை வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால், அது சாத்தியமில்லாத விடயம். அவ்வாறு அவரிடம் ஏதேனும் ஒரு திட்டம் இருக்குமானால், அதை தான் வரவேற்பதாகவும், ஜனாதிபதியிடம் அந்த திட்டத்தை சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்ட பிரதமர் ரணில் அனுர குமாரவிடம் உள்ள திட்டம் சாதகமாக இருக்குமானால், பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கு தான் தயார் எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here