பதுளை லுனுகல பிரதேசத்தில் கடத்தப்பட்ட சிறுமி உடகிருவ காட்டுப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பதுளை லுனுகல பிரதேசத்தில் கடந்த 3ஆம் திகதி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது சிறுமி 8 நாட்களுக்குப் பின்னர் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியை கடத்தியதாக கூறப்படும் 18 மற்றும் 53 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக லுனுகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமியும் வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.