பனிரெண்டு வயது பாடசாலை மாணவனைக் காணவில்லை

0
341

நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஒயா டெஸ்போட் தோட்டப் பகுதியில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவரை காணவில்லை என நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் இருந்து சிறுவன் காணாமல் போயுள்ளதாக சிறுவனின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காணாமல் போன சிறுவன் டெஸ்போட் தோட்டத்தை சேர்ந்த 12 வயது உடைய மகேந்திரன் ஆசான் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவ – சதீஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here