புசல்லாவை விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம்

0
284
புரட்டொப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரட்டாசி பகுதியில்  இருந்து புஸல்லாவை நோக்கி பயணித்த பஸ் இன்று காலை விபத்துக்குள்ளானது.
 இதன்போது சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த உள்ளதுடன், 10 பேர் காயமடைந்து, வகுப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
 19 வயதுடைய காச்சாமலை பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கவிஷான் என்பவரும் 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான புஸ்பகுமார என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பஸ்ஸில் 70 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள்  பஸ்ஸை எரித்துள்ள நிலையில், குறித்த வீதியில் பயணிகள் போக்குவரத்தில் இரண்டு பஸ்களே சேவையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புரட்டொப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here