புலமைப்பரிசில் மாணவர்களுக்கான செயலமர்வு நுவரெலியாவில்

0
214

‘விஷ்ணு அரோஹணம்மன்றத்தினரின் ஏற்பாட்டில் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மண்டபத்தில் நுவரெலியா நகரிலுள்ள பாடசாலைகளில் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் தோற்ற விருக்கும் மாணவமாணவிகளுக்கான செயலமர்வு நேற்று திங்கட்கிழமை  நடைபெற்றது.

இவ் வைபவத்தில் அகில இலங்கை கலாசார மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச பணிப்பாளரும் விஷ்ணு அரோஹணம் மன்றத்தின் ஸ்தாபகருமான கலாநிதி சதாநந்தன் திருமுருகன்,முன்னாள் நுவரெலியா மாநகர பிரதி முதல்வர் கிருஸ்ணசாமி சந்திரசேகரன்  கல்லூரி அதிபர் என். நவரட்னம்,  ஆசிரியர் பெரியசாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here