புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்

0
219

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாக ‘மனுசவி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நீண்டகால அபிலாஷையை நிறைவேற்றும் வகையில் ‘மனுசவி’ ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் ஓய்வுக்கால வாழ்க்கையை வலுப்படுத்தும் வகையில் ‘மனுசவி’ சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியின் உயிரையும் பாதுகாக்கும் வகையில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் உறுதியளித்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்லும் போது இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம் இணைந்துக்கொள்ளலாம். ஒருவரின் விருப்பப்படி நான்கு ஆண்டுகளுக்கு 11 அமெரிக்க டாலர்கள் மாதந்தோறும் செலுத்தப்பட்டால், 55 ஆண்டுகளுக்குப் பின்னர் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு ஆரம்பத்தில் குறைந்தபட்சம் 20ஆயிரம் ரூபாய் மாதாந்த ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இது ஓர் ஆரம்பம். ஆனால், ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி தனது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் சம்பளம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப உங்களின் எதிர்கால ஓய்வூதியத்தை திட்டமிட உங்களுக்கு சுதந்திரம் உள்ளதாக இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here