பெற்றோல் இன்று ; டீசல் நாளை

0
442

பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைய வுள்ளது. இதற்கமைய நாளை வெள்ளிக்கிழமை முதல் பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

மசகு எண்ணெய் இன்மையால் நாளை முதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீள மூடவேண்டிய நிலை ஏற்படுவதாக கனிய எண்ணெய் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரண்வல குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here