சைக்கிளிலிருந்து பெற்றோல் திருடப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், இடம்பெற்ற மோதலில் ஒருவர் கத்திகுத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பொரளை – காசல் வீதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சைக்கிளிலிருந்து பெற்றோல் திருடப்பட்டது தொடர்பில் இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் போது வண்டியின் உரிமையாளரை பெற்றோல் திருட வந்ந சுமார் 25 வயதுடைய இளைஞன் கத்தியால் குத்தியுள்ளார்.
இதன்போது 40 வயதுடைய குறித்த உரிமையாளர் உயிரிழந்துள்ளதுடன் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.