பொகவந்தலாவையில் வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்த வேன் ; மூன்று சிறுவர்கள் வைத்தியசாலையில்

0
1112

ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ கெம்பியன் பகுதியை நோக்கி பயணித்த வேனொன்று கெம்பியன் நகரில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்தமையினால் ஏற்பட்ட விபத்தில் மூன்று சிறுவர்கள் காயமடைந்தநிலையில் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .

இன்று ஞாயிற்றுக்கிழமை 12 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்த விபத்தின் இரண்டு வர்த்தக நிலையங்களும் சிகை அலங்கார நிலையமொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சிகை அலங்கார நிலையத்திற்கு வருகைத் தந்திருந்த 3, 6, 8 வயதினை கொண்ட சிறுவர்களே காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின்போது கெம்பியன் பகுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here