பொசன் பண்டிகையை முன்னிட்டு விஷேட சேவையில் 400 பஸ்கள்

0
222

பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரத்திற்கு 9 விசேட புகையிரதங்களையும் 400 பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள் ளதாக புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. ,ன்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமான இச்சேவை மதியம் 12.40 மணி, மாலை 04.40 மணி, மாலை 06 மணி மற்றும் இரவு 09 மணிக்கு அநுராதபுரத்துக்கு விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குறித்த காலப்பகுதியில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப அநுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here