பொதுமக்கள் உதவியை கோரும் பொலிஸார்

0
296

கொழும்பில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதியன்று னாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களின் புகைப்படத் தொகுப்பை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் வீட்டிற்கு சேதம் விளைவிப்பதற்கும் தீ வைப்பதற்கும் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் குழுவை புலனாய்வு குழுவினால் தேடப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, சந்தேக நபர்களை அடையாளம் கண்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக 14 புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அந்தப் புகைப்படங்களில் உள்ளவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களான 071-8594950, 071-8594929 அல்லது 011-2422176 ஆகிய எண்களுக்கு வாட்ஸ்அப் அல்லது அழைப்புகள் மூலம் தெரிவிக்குமாறு பொதுமக்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here