மகனின் கட்டைத் தாக்குதலுக்கு பலியான தந்தை

0
320

மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவமொன்று குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் 66 வயதுடைய பரகடுவ, பொஹொரபாவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடிபோதையில் வந்த மகன் அவரது மனைவியை தாக்கிய போது அவரை காப்பற்ற முற்பட்ட தந்தையை மகன் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here