மகா சமன் தேவாலயத்தின் வருடாந்த பெரஹெர நிகழ்வு

0
385

இரத்தினபுரியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மகா சமன் தேவாலயத்தின் வருடாந்த பெரஹெர நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை   வெகு சிறப்பாக இடம்பெற்று,

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் (11) இரத்தினபுரி களு கங்கையில் நீர் வெட்டுடன் பெரஹெர நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

மேற்படி பெரஹெர இறுதி நிகழ்வில் மத குருமார்கள் மற்றும் கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தேல பண்டார, இரத்தினபுரி மகா சமன் தேவாலயத்தின் பஸ் நாயக்க நிலமே மிகார ஜயசுந்தர, அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குனரத்ன, சப்ரகமுவ மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மஞ்சுளா இதிகாவெல, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோத்தாகம உட்பட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

இரத்தினபுரி நிருபர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here