மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவையில் கைது

0
443

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஜந்து சந்தேக நபர்களை பொகவந்தலாவை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

மாவெளி வனப்பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது இந்த ஜந்து சந்தேக நபர்களும் கைது செய்யபபட்டனர்.

இதன்போது, மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்கள் ஐவரும் பொகவந்தலாவை இராணிகாடு மற்றும் ஆல்டி தோட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here