ராகலை குடியிருப்பில். தீ- மூவர் மீட்பு

0
237

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்திரிதென்ன கிராமத்தில் இன்று அதிகாலை தீ விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தனி வீடு ஒன்றே தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சார ஒழுக்குக் காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் இராகலை பொலிஸார், சம்பவத்தின் போது வீட்டில் இரு பிள்ளைகள் உட்பட தாயுடன் மூவர் மாத்திரம் இருந்துள்ளனர் எனவும், இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

வீட்டின் ஒரு பகுதி கூரை மற்றும் படுக்கையறை ஆகியன தீப்பற்றியுள்ளதுடன், ஆடைகள் மற்றும் தளபாடங்களும் பகுதியளவில் தீக்கிரையாகியுள்ளதாகவும் இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here