லும்பினி சர்வதேச பௌத்த அமைப்பின் மருந்துப் பொருட்கள் கையளிப்பு

0
127

நேபாளத்தின் லும்பினி சர்வதேச பௌத்த அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் வணக்கத்திற்குரிய மைத்திரி தேரரினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப்பொருட்கள் கையளிப்பு நிகழ்வு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

100 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மருந்துப் பொருட்கள் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சர்வதேச லயன்ஸ் கழக 306 C 2 பலாங்கொடை கிளையின் கோரிக்கைக்கு அமைய இந்த மருந்துப் பொருட்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here