இரண்டாம் எலிசபெத் மகாராணி வரலாற்றில் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளார்.
உலகில் அதிக காலம் கிரீடம் சூடிய மகாராணியான இவர், 70 ஆண்டுகளையும் பூர்த்தி செய்துள்ளார்.
1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி தனது 25 ஆவது வயதில் இரண்டாம் எலிசபெத் மாகாராணியாக முடிசூடிக்கொண்டவர் அதிகளவான காலம் இவரே மகாராணியாகவும் இருந்துள்ளார்.
அவரது தந்தையான ஆறாவது ஜோர்ஜ் மன்னர் 1952 ஆம் ஆண்டு மரணித்ததன் பின்னர் பிரித்தானிய மகாராணியாக இரண்டாம் எலிசபெத் தெரிவானார். அவர் மாகாராணியாக தெரிவாகி இன்றுடன் 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பிரித்தானியாவில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.