வாய்ப்பினை இழந்தார் வணிந்து ஹஸரங்க

0
675

இங்கிலாந்தின் ‘த ஹன்ட்ரட்’ தொடரில் (2022) மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வணிந்து ஹஸரங்க அந்த வாய்ப்பினை இழந்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை வணிந்து ஹஸரங்கவிற்கு ஹன்ட்ரட் தொடரில் விளையாடுவதற்கான ஆட்சேபனை இல்லா சான்றிதழை வழங்க மறுத்ததனை அடுத்தே அவருக்கு இந்த தொடரில் ஆடும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

இதேநேரம் வணிந்து ஹஸரங்க ஹன்ட்ரட் தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்ததனை அடுத்து அவருக்கு மென்சஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி வழங்கிய சுமார் 100,000 பவுண்டுகள் பெறுமதியான (இலங்கை நாணயப்படி சுமார் 43.5 மில்லியன் ரூபா) வீரர் ஒப்பந்தத்தினை பெறுவதும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரியான ஏஷ்லி டி சில்வா வணிந்து ஹஸரங்கவினை ஆசியக் கிண்ண டி20 தொடருக்கு உடல்நிலை மற்றும் உளநிலை அடிப்படையில் சிறந்த முறையில் தயார்படுத்தும் நோக்குடனேயே, அவருக்கு ஹன்ட்ரட் தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தினை வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வணிந்து ஹஸரங்கவின் பிரதியீட்டு வீரராக மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ட்ரிஸ்டான் ஸ்டேப்சினை ஒப்பந்தம் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here