வாள்களுடன் வீடொன்றினுள் முகமூடி கும்பல் நுழைந்து கொள்ளை

0
285

அதிகாலையில் வாள்களுடன் வீடொன்றினுள் நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று வீடொன்றில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவமொன்று யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் அதிகாலையில் முகமுடிகளை அணிந்துக்கொண்டு வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பலொன்று வீட்டை உடைத்து வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு, ஏனையவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி வீட்டில் இருந்தவர்கள் அணிந்திருந்த 10 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் தெரியவருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here