வாழ்க்கை முறைகளை வழிப்படுத்தும் யோகா

0
273

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்துஇ செயல்படஇ உடல் ஆரோக்கியமாக இருக்கஇ நோய்களைத் தடுக்கஇ மூப்பைத் தடுக்கஇ என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும்இ யோகா பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களும் மீண்டும் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் பாரம்பரியமான யோகாசனம்,  வெளிநாட்டவர்களிடையே மிகவும் பிரபலமாகியது. மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்களும் யோகாசனத்தை முறையாகக் கற்று தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். யோகாசனப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கண்டு சேர்ப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்தர மோடி, ஐநா சபையில் இதற்காக ஒரு நாள் ஒதுக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்.

அதையொட்டிஇ 2014 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 12 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யோகா என்பது ஒன்றிணைத்தல் அல்லது ஒரு முகப்படுத்துதல் என்று கூறப்படுகிறது. யோகாசன பயிற்சிகள் எட்டு பாகங்களாக, அதாவது அங்கங்களாகப் பிரிக்கலாம். எனவே, யோகா என்பது ஆசனங்கள் மட்டும் அல்ல.

அவசர கதியில் செல்லும் வாழ்க்கையில்இ உடல் நலமில்லாமல் போவது கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரைஇ மன அழுத்தம் மனச்சோர்வு (டிப்ரஷன்), படபடப்பு, போன்றவை மற்றும் இளம் வயதிலேயே உடல் பருமன், குறைபாடு ஆகியவை பரவலாகக் காணப்படுகிறது. வாழ்க்கை முறை நோய்களும் குறைபாடுகளும் அதிகரித்து வருகிறது.

யோகாவின் எட்டு அங்கங்களில் ஒன்று பிராணாயாமா. இது மூச்சு விடுதலில் கவனம் செலுத்துகிறது. அனைத்து எட்டு அங்கங்களும் சேர்த்து அஷ்டாங்க யோகா என்று அழைக்கப்படுகிறது.

யோகா என்றால் ஒன்றிணைதல் அல்லது ஒருமுகப்படுத்துதல். மனதை கட்டுப்படுத்தி மன அழுத்தங்களை குறைத்து, அமைதி தருவது. பல சகாப்தங்களுக்கு முன், மகாரிஷி பதஞ்சலி, விடுதலைக்கான எட்டுக்கதவுகளை விவரித்திருக்கிறார். அதையே நாம் இன்று ‘அஷ்டாங்க யோகா’ என்று கூறுகிறோம்.

எப்படியெல்லாம் யோகா செய்யக்கூடாது? தவறாக செய்தால் என்ன ஆபத்து?
தற்போதைய சகாப்தத்தில், ஆசனம், பிராணயாமம், தியானம் போன்ற அஷ்டாங்க யோகாவின் சில பகுதிகளை மட்டுமே நாம் அறிந்து கொள்ள முடிந்தது.

இந்தக் கட்டுரையில் பதஞ்சலி யோகாவின் எட்டு அங்கங்களை குறித்த தகவல்களை பார்க்கலாம்.

யமம்

இதில் 5 விஷயங்களை ஒருவர் பின்பற்ற வேண்டும்

அகிம்சை – எண்ணத்தால், செயலால், சொல்லால் யாரையும் புண்படுத்தாமல் இருத்தல்
வாய்மை – சத்தியம், உண்மையை கடைபிடித்தல்
கள்ளாமை – களவு செய்யாது இருத்தல்
பிரம்மச்சார்யம் – காமம் கடத்தல்
அவாவறுத்தல் – தனக்கு மட்டும் என்று சொந்தம் கொண்டாடாமல் இருப்பது; பேராசயை அடக்குதல்

 நியமம்

இதிலும் ஒருவர் 5 விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்
ஷெளச்சம் – தூய்மையான எண்ணம் மற்றும் செயல்கள்

சந்தோஷம் – திருப்தி; போதுமென்ற மனம்
தவம் – நற்பண்புகளை அடைந்து தீய பண்புகளை நீக்குதல்
சுவாத்யாயம் – வேதங்களை படித்தல்; ஆன்மிக வாழ்வுக்கு ஏற்ற நூல்களை படித்து பயன்பெறுதல்
ஈஸ்வர பிரனிதானம் – இறைவழிபாடு

ஆசனம்

தற்போது யோகா என்றால் பலரது நினைவுக்கு வருவது ஆசனம்.

ஆசனம் என்பது வெறும் கை, கால்களை அசைக்கும் உடற்பயிற்சி மட்டுமே கிடையோது.

இதுதொடர்பாக பதஞ்சலி மகரிஷி சொல்வது என்னவென்றால், திடமாகவும், சுகமாகவும் அமர்ந்திருக்க வேண்டும், இல்லையென்றால் அது ஆசனம் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

பிராணாயாமம்

மூச்சுக்காற்றை ஒழுங்குப்படுத்துவது.
மூச்சை விடுதல் மற்றும் பிடித்தல் ஆகிய இரண்டையும் முறையாக செய்வதால், ஒருவரின் மனதையும், உடலையும் இணைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

பிரத்தியாகாரம்

பிரத்தியாகாரம் என்பது அனைத்து புலன்களையும் கட்டுப்படுத்துவது ஆகும். மொத்தம் 11 புலன்கள் உள்ளன. அதாவது ஐந்து உணர்வுகள், ஐந்து செயல் புலன்கள் மற்றும் ஒரு மனம்.

பிரதி மற்றும் அகாரா, அதுவே பிரத்தியாகாரம் எனப்படுகிறது. அதாவது புலன்கள் அனுபவிக்கும் விஷயங்கள். உதாரணமாக உண்ணுவது.

நாம் எந்த செயல் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு ஆற்றல் தேவைப்படும் என்று அறிவுஜீவிகள் கூறுகிறார்கள்.

புலன்களின் தொடர்ச்சியான அவசரம் நம்மை சக்தியற்றதாக்குகிறது.
புலன்களின் அவசரத்தை கைவிட்டு, மகிழ்ச்சியாக இருப்பதே பிரத்தியாகாரம்

தாரணம்


ஒரு இடத்தில் மனதை பொருத்துதல்.
இந்நாட்களில் இது தியானத்தோடு குழப்பிக் கொள்ளப்படுகிறது
மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிதான் தாரணம்.
இது பிராணதரனா போன்ற பல வடிவங்களை கொண்டது. தாரணம் என்பது தியானத்துக்கு முன் நிலை. மனம், எண்ணோட்டத்தை தாரணம் கட்டுப்படுத்துகிறது. ஒருவருக்கு அமைதியை தருகிறது.

 தியானம்


தாரணம் இருந்தால்தான் தியானம் சாத்தியமாகும் என்று யோக சூத்திரம் சொல்கிறது.
நம்மால் தியானம் செய்ய முடியாது. அதுவாகவே நிகழ வேண்டும்.
உதாரணமாக நாம் தூங்க முயற்சிக்கலாம். ஆனால் நம்மால் முடியாது. அது தானாகவே நிகழ வேண்டும்.
தியானம் என்று நாம் என்ன செய்தாலும், அது தாரணத்திற்கு இட்டுச் செல்லும், அதாவது ஒரு இடத்தில் மனதை பொருத்துதல்.
பொருந்திய மனதை அங்கேயே நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியே தியானம்.

சமாதி


சமா என்றால் சமம். இதிலிருந்து வந்த வார்த்தைதான் சமாதி.
யோகா யஜ்னாவல்க்ய சம்ஹிதாவில், ஆன்மா மற்றும் உச்ச ஆத்மாவின் சமத்துவ நிலை சமாதி என்று அழைக்கப்படுகிறது.
யோகி தனது உண்மையான வடிவத்தில் உள்வாங்கப்படும்போது, தேடுபவரின் அந்த நிலை சமாதி என்று அழைக்கப்படுகிறது என்று மகரிஷி பதஞ்சலி கூறுகிறார்.
சமாதி என்பது சரியான யோக நிலையின் வெளிப்பாடு.
புத்தர் அதை நிர்வாணம் என்றும் மகாவீரர் கைவல்யா என்றும் அழைத்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here