விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

0
219

இன்று முதல் , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. சர்வதேச நாடுகளுக்கிடையிலான விமான நிலையத்தின் போக்குவரத்து நடவடிக்கை 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

னினும், கொரோனா தொற்று காரணமாக அதன் நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவுக்கான விமான சேவைகளை முன்னெடுக்க சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிறுவனங்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்று முதல் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் முன்வைத்த யோசனை திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதையடுத்து இன்று முதல் சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here