வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி சடலமாக மீட்பு

0
488

வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில், சேலை பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கந்தப்பளை- ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி என்ற சிறுமியே மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற அன்று, சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடி கொண்டிருக்கும்போது தாய் மலசலகூடத்துக்கு சென்றிருந்ததாகவும் பின்னர் மலசலகூடத்திலிருந்து வெளியே வந்து பார்த்த போது, சிறுமியின் கழுத்து சேலையில் இறுகியிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.

சம்பவத்தையடுத்து, அயலவர்களின் உதவியுடன் சிறுமியை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் பரிசோதித்த வைத்தியர், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here