வெலிமடையில் மரம் முறிந்து குடியிருப்பு சேதம்

0
181

பாரிய மரம் ஒன்று தோட்ட குடியிருப்பில் முறிந்து விழுந்ததில், வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிமடை- டயரபா மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று இரவு வீசிய கடும் காற்றினால் குறித்த மரம் தோட்ட குடியிருப்பில் முறிந்து விழுந்துள்ளமையினால் இச்சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த மரம் தொடர்பில், பல மாத காலமாக வெட்டுவதற்காக அனுமதி கேட்ட போதிலும் தோட்ட நிர்வாகம், அனுமதி வழங்கவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். அனுமதித்திருந்தால் ஆபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here