வேலை முடித்து வீடு சென்ற பெண் குத்திக்கொலை

0
248

எலபாத பிரதேசத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் பெண்னொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் சம்பவ தினத்தன்று கணவர் வேலைக்குச் செல்லவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

பலியானவர் 27 வயதுடைய பெண் என தெரிய வந்துள்ளது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கெஹலோவிடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் 21 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொலை நடந்த அன்று பிற்பகல் சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் உள்ள வீதியொன்றில் வைத்து அவரிடம் 100 ரூபா பணம் கேட்டுள்ளார்.

குறித்த பெண் கொடுக்க மறுத்ததையடுத்து அவரை மூன்று இடங்களில் கத்தியால் குத்தியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் சந்தேகநபர் அந்த பெண்ணின் கையில் இருந்த சாமான்களை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். சந்தேகநபர் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, கசிப்புக்கு அடிமையானதாகவும், கசிப்பு குடிக்க பணம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here