வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா

0
255

வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர் 7 பேரே பாதிக்கப்பட்டுள்ளனர்.    தற்போது கம்பஹா வைத்தியசாலையில் 5 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கொரோனா விடுதிகள் மீண்டும் சிகிச்சையை ஆரம்பித்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், பரிந்துரைக்கப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here