அட்டன் -குடாகம வீதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகிய ஆட்டோ

0
1237

அட்டன் – நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகேகொடையில் இருந்த வெலிமடைக்குச் செல்வதற்காக வந்த முச்சக்கர வண்டி இன்று அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது.
வேகக்கட்டுப்பாடின்மையே இவ்விபத்துக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்துள்ள நிலையில் தெய்வாதீனமாக உயிர்சேதம் ஏற்படவில்லையென தெரிவிக்கும் அட்டன் பொலிஸார் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.

எனினும் முச்சக்கர வண்டி கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எம்.கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here