அதி வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் ஆறு மாதங்களில் 5ஆயிரம் பேர் பாதிப்பு

0
112

எலிக்காய்ச்சலால் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுவதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவிக்கையில்,

விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் இரத்தினக்கல் அகழ்வு போன்ற தொழில்களில் ஈடுபடும் ஆண்களை எலிக்காய்ச்சல் பீடிக்கிறது. ஆனால், பல ஆண்டுகளாக பெண்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.
இந்தக் காய்ச்சலால் கடந்த ஆண்டு 9,000 பேர் பாதிக்கபட்டிருந்தனர். இவாண்டு இதுவரை 5,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மொனராகலை மற்றும் குருநாகல் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எலிக்காய்ச்சல் (Leptospirosis) என்பது ஒருவகை பக்டீரியாவின் மூலம் பரவுகிறது. எலிக்காய்ச்சலைப் பரப்பும் பக்டீரியா, பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீரகத்தில் வாழ்கிறது. எலியின் சிறுநீர், மலத்தில் இந்த பக்டீரியா வெளியேறும். எலியின் கழிவுகள் கலந்த தண்ணீர் அல்லது உணவை உட்கொள்ளும்போது எலிக்காய்ச்சல் ஏற்படும்.

எலியின் கழிவுகளை நாம் மிதித்துவிட்டால், நம் உடலில் உள்ள காயங்கள், சிராய்ப்புகள், உலர்ந்த பகுதிகள், வாய், மூக்கு, அந்தரங்கப் பகுதிகள் வழியாக பக்டீரியாக்கள் உடலுக்குள் சென்றுவிடும்.

கடுமையான மழையைத் தொடர்ந்து தொற்றுநோய்களின் அபாயம் அதிகரிக்கிறது .இது நீர் ஆதாரங்கள் மாசுபடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த காய்ச்சல், தசை வலி, மஞ்சள் காமாலை, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படுகிறது. கடுமையான சந்தர்ப்பங்களில், சிறுநீரகம், இதயம் அல்லது சுவாச செயலிழப்புக்கு வழிவகுக்கும். எலிக்காய்ச்சலுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டும்.

பாதுகாப்பான சுகாதார வழிமுறைகசளை கடைப்பிடிக்க வேண்டும், அசுத்தமான தண்ணீருடன் தொடர்பை தவிர்த்தல்,முறையான கழிவு முகாமைத்துவம் போன்றவற்றால் நோய் பரவலை தடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here