ஆசிரியரை காதலித்து 23 இலட்சம் மோசடி செய்த இரு பிள்ளைகளின் தந்தை

0
514

ஆசிரியை ஒருவரிடம் 23 இலட்சம் ரூபாவை மோசடி செய்த இரு பிள்ளைகளின் தந்தையான  தனியார் காப்புறுதி நிறுவன அதிகாரியை பொலிஸார். தேடி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பிபிலை, பியல்கும்புர பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  32 வயதான குறித்த ஆசிரியை பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் அதிகாரியுடன் காதல் தொடர்பைக் கொண்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கார் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளை கூறி பல சந்தர்ப்பங்களில் 23 இலட்சத்து 3, 600 ரூபாவை அந்தப் பெண்ணிடமிருந்து பெற்றுள்ளார்.

ஆசிரியையின் கடன் அட்டையை பயன்படுத்தியும் பல சந்தர்ப்பங்களில் பணத்தைப் பெற்றுள்ளார்.

இந்நிலையல், தான் காதலிக்கும் நபர் திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதை அறிந்த ஆசிரியை சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு சென்துள்ளார்.. இதனையடுத்தே சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

மொனராகலை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here