இரசாயன நச்சுப்புகையை சுவாசித்த 30 பேர் வைத்தியசாலையில்

0
120

தொழிற்சாலையொன்றில் இரசாயன நச்சுப் புகையை சுவாசித்த 30 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் தனிப்பட்ட சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏனைய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றில் கலவை தயாரிக்கும் போது இரசாயனப் பொருளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here