இ. போ. ச பஸ் டிப்போவில் கடமையாற்றிய ஊழியர் சடலமாக மீட்பு

0
329

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான கம்பளை பஸ் டிப்போவில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர் குறித்த டிபோ வளாகத்தில் அமைந்துள்ள பாரிய கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது பூண்டுலோயா டன்சினன் தோட்ட கீழ்ப்பிரிவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயது சவரிமுத்து இராஜேந்திரன் என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கம்பளை தெல்பிட்டியில் அமைந்துள்ள டிபோவில் சேவையாற்றிவந்த மேற்படி நபர் புதன் கிழமை மாலை சேவையினை நிறைவு செய்துள்ளபோதும் வீட்டுக்கு செல்லாததினையடுத்து அவரின் மனைவி இரவு 9 மணியளவில் டிப்போ நிர்வாகத்திடம் தொலைபேசியில் அழைத்து தனது கணவர் வீட்டுக்கு வரவில்லை என்பதனை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த காவலாளிகள் தேடி பார்த்த பொழுது குறித்த நபர் அங்கிருந்த கிணற்றிலிருந்து இரவு 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஸ்தல விசாணைகளை கம்பளை நீதி மன்ற மேலதிக நீதவான் காந்திலதா மேற்கொண்டதோடு மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

கம்பளை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here