11 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் இன்று பசறை தமிழ் தேசியக் கல்லூரி வளவில் இடம்பெற்றுள்ளது.
கல்லூரி வளவில் விளையாடிக் கொண்டிருந்த மாணவஇ மாணவிகளையே குளவிகள் கொற்றியுள்ளன. மாணவர்கள் 4 பேரும் 7 மாணவிகளுமே குளவிக் கொட்டுக்கு இலக்காகினர். கல்லூரி வளவில் இருந்த குளவிக்கூடு களைந்ததினாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பசறை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இம் மாணவஇ மாணவிகளின் நிலை கவலைக்கிடமாக இல்லையென மருத்துவமனை பிரதம வைத்தியர் தெரிவித்தார். தொடர்ந்து இம் மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவஇ மாணவிகள் பசறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை படங்களில் காணலாம்.
பதுளை செல்வராஜா