சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி பைக்குடன் மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸார் பலி

0
137

அவிசாவளை நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

தும்மோதரையிலிருந்து அவிசாவளை நோக்கி சீமெந்து லொறி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னோக்கி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதனாலேயே இவ்விபத்து சம்பவித்ததாக தெரியவருகிறது.

இதன்போது, மோட்டர் சைக்கிளில் வந்த பெபொலிஸார் இருவரில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கால்வாயில் மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர், லொறி சாரதி, உதவியாளர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here