தலவாக்கலை விபத்தில் மெராயாவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

0
2747

தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த சம்பவமொன்று இன்று தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை – கொத்மலை வீதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த லிந்துலை மெராயா தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தலவாக்கலை பஸ் தரிப்பிடத்திலிருந்து பூண்டுலோயா நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் பத்தனை பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுமே நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதாகவும் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here