தேர்தல் பிரசாத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிரியாணி கண்டியில் சிக்கியது

0
162

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர்இ ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்துஇ கம்பளைஇ போத்தலப்பிட்டியில் அமைந்துள்ள ‘வைட் வின்ஸ்’ நிகழ்வு மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதுஇ தனது ஆதரவாளர்களுக்கு உணவு வழங்கி உபசரிக்க தயாராகும் போதுஇ கண்டி உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழு நிகழ்வை இரத்துச் செய்ததுடன்இ உணவுப் பொருட்களில் ஒரு பகுதியையும் அவர்கள் காவலில் எடுத்து கம்பளை பொலிஸ் நிலையத்திற்;கு கொண்டு செல்ல முன்வந்துள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கு பிரியாணி வழங்க தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
1500 ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட உணவில் இருந்துஇ பெரிய தொட்டிகளில் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்ட ஒரு கத்தரி மோஜுஇ ஒரு சட்னி மற்றும் மற்றொரு கறி ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி மஹிந்தானந்த அளுத்கமஇ நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன சாந்தினி கொங்கஹாஇ வேலு குமார் கம்பளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் சமந்த அரண குமார உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர்கள் வருவதற்கு முன்இ தேர்தல் ஆணையக அதிகாரிகள் வந்துஇ இந்த உணவை தங்கள் காவலில் எடுத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here