பாடசாலை வாகனங்கள்-பஸ்களுக்கு விஷேட எரிபொருள் ஏற்பாடு

0
247

இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்களில் இருந்து பாடசாலை வாகனங்கள் மற்றும் பஸ்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைபோக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை  ஆரம்பமாகின்றன.

இந்த நிலையில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here