‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டத்தை தடையின்றி நடத்த புதிய இடம்

0
295

பாராளுமன்றம், புது ஆரம்பத்துக்காக 24 மணி நேரம் ஒத்தி வைக்கப்படும் என ரணில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில், கட்சி தலைவர்களுடனான விசேட சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் 24 மணித்தியாலம் ஒத்தி வைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்படும். அதன் மூலம் தனது அரசாங்க த்தின் கொள்கை உரையை ஆற்ற ஜனாதிபதி விரும்புவதாக நினைக்கிறேன்.

போராட்டக்காரர்கள் தமது “கோ-ஹோம்-ரணில்” போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பிரதேசம் ஒதுக்கி தரப்படும் என்றும், தமது நல்லாட்சி காலகட்ட அசல் 19ம் திருத்த ஆவணம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக அரசியலமைப்புக்குள் கொண்டு வர விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக மனோ எம்.பி தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தையும், பாராளுமன்றத்தையும், MP க்களை கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த விரும்புவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here