மனைவிக்கு தெரியாமல் ஆண் குழந்தையை விற்ற கணவன்

0
288

பிறந்து ஏழு நாட்களே ஆன ஆண் குழந்தையை ஐம்பதாயிரம் ரூபாவுக்கு வெளிநாட்டு பெண் ஒருவருக்கு தந்தையொருவர் விற்பனை செய்த சம்பவமொன்று  அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து இந்த கொடுக்கல் வாங்கலில் இடைத்தரகராக செயற்பட்ட கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும் அநுராதபுரம் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் தாய் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குழந்தையை வாங்கியதாக கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டதுடன் குழந்தை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். மேலதிக  விசாரணைகளை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here