முச்சக்கர வண்டியுடன் இரயில் மோதி விபத்து; ரஷ்ய பெண் , சாரதி பலி

0
282

கடுகதி ரயில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவமொன்று  இன்று இடம்பெற்றுள்ளது. 

காலி மாவட்டம், பெலிஅத்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ‘ரஜரட்ட ரெஜின’ எனும் கடுகதி புகையிரதம், தல்பே புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த ரஷ்ய நாட்டு பெண்ணும் முச்சக்கர வண்டி சாரதியும் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

உணவட்டுன, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவெல்ல பிரதேசத்திலுள்ள மஹரம்ப புகையிரத கடவையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த கடவையிலுள்ள புகையிரத சமிக்ஞை விளக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லையெனவும்,  அது தொடர்பான அறிவிப்பு பலகையொன்று அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here