ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவில் பஸ் விபத்து 15 க்கும் மேற்பட்டோர் காயம்

0
368
வலப்பனை கீர்த்தி பண்டாரபுர  வழியின் ஊடாக   கண்டி- பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் இன்று  மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கும் அதிகமான பயணிகள் காயமடைந் துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள்  மோதியதைய டுத்தே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
 இவ்விரு பஸ்களிலும் பயணித்த பயணிகளில் 15 பேர் விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் கீர்த்தி பண்டாரபுர கழகத்தின் பிரதேச வைத்தியசாலைக்கும், ஒரு சிலர் வலப்பனை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் இரண்டு பஸ்களில் ஒன்றின் பின் பகுதி பலத்த சேதமாகியுள்ளதுடன் இப் பஸ்ஸில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கே பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை பொலிசார் தெரிவித்தனர்.
வேகக் கட்டுப்பாட்டை மீறிய இவ்விரு பஸ்களும் மோதிக்கொண்டதாக தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here