10 நாட்களுக்குள் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்

0
138

2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வாரத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக அறியக்கூடியதாக உள்ளது.

அவ்வாறு செய்ய முடியாவிட்டால் எதிர்வரும் பத்து நாட்களுக்குள் நிச்சயம் முடிவுகள் வெளியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 6 அன்று நடைபெற்றது, இதில் 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில் 387,648 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் தோற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here