100 வயதைக் கடந்த வயோதிபர் கௌரவிப்பு (படங்கள் இணைப்பு )

0
279

மன்னாரில் 100 வயதை கடந்த வயோதிபரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் மற்றும் அதிகாரிகளும் அவ் வயோதிபரை சந்தித்து அவரை கௌரவித்த சம்பவம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு 100 வயதை கடந்த மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சாளம்பன் கிராமத்தை சேர்ந்த மனுவேல்  சந்தான்  என்ற முதியவரையே  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மெல் மற்றும் அதிகாரிகள் அவரின் இடத்துக்குச் சென்று  திங்கட்கிழமை (20.06.2022) அவரை கௌரவித்துள்ளனர்.

குறித்த முதியவருக்கு  நான்கு மகள், இரண்டு மகன், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் என 49 உறுப்பினர்களைக் கொண்ட  குடும்ப  அங்கத்தவர்கள் உள்ளனர்.

இதன்போது அரசாங்க அதிபர் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு  மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் முதியவரிடம்  ஆசி பெற்றனர்.

மேலும் முதியவருக்கு கனடாவில் வசிக்கும் பிரகாஷ் செல்வராஜா என்பவர் ஐம்பதாயிரம் ரூபா கொடுப்பனவை அன்பளிப்பு செய்திருந்தமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here