12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நடந்தது என்ன?

0
278

இலங்கையில் உள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய எரிபொருள் அட்டை அதாவது QR  முறைமையிலான வழிகாட்டுதல்களுக்கு எரிபொருள் நிலையங்கள் இணங்கத் தவறியதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

‘CPC சந்தைப்படுத்தல் பிரிவின் ஊடாக QR முறையினை செயற்படுத்தும் எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் மதிப்பாய்வு இன்று நடைபெற்றது. மதிப்பாய்வின் அடிப்படையில் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத 12 நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார்.

நிலையங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்கள் பெறும் புகார்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here