20 துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலி

0
177

இலங்கையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இன்று வரை 20 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளே பெரும்பாலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here