2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு இணையத்தின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக பரீட்சார்த்திகள் விண்ணப்ப படிவங்களை சமர்பிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கையில்,விண்ணப்பதாரர்கள்
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அரச பாடசாலை மாணவர்கள் ஏற்கனவே தமது பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உரிய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இணையவழி மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் அச்சிடப்பட்ட நகல் கிடைத்த பின்னர் தேவை ஏற்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்காக தன் வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.