2023 மார்ச்சில் மகளிர் IPL போட்டி தொடர் ஆரம்பம்

0
262

2023 மார்ச் மாதத்தில் மகளிர் IPL போட்டித் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (IPL) மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இந்த தொடர் மூலம் பல திறமையான வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகின்றனர்.

இதன் காரணமாக இந்தியாவில் மகளிருக்கான IPL தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி 2023 ஆம் ஆண்டு நிச்சயம் மகளிர் IPL தொடர் நடைபெறும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மகளிர் உள்நாட்டு கிரிக்கெட்டிற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி வழக்கமாக இந்தியாவில் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் தொடர் ஒக்டோபரில் ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை மகளிர் உள்நாட்டு தொடர்கள் அனைத்தும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதன் காரணமாக மகளிர் IPL தொடர் மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று கருதப்படுகிறது.

நீண்ட நாட்களாக எழுந்த கோரிக்கைக்கு பிறகு பிசிசிஐ மகளிர் IPL தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் 6 அணிகள் வரை பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here