2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி

0
432

நாட்டின் ஜனாதிபதியாக எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே பதவி வகிப்பார். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. எனவே, சகல கட்சிகளும் எவ்வித பேதமும் இன்றி ஜனாதிபதி ரணில் விக்கிர மசிங்கவுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐ.தே. க. தலைமையகமான சிறி கொத்தாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்று உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரையில் வெற்றி பெற்ற தில்லை. அதேபோன்று எந்தவோர் அரசியல் தலைவரும் வெற்றியடைந்ததில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் பேசுவது பிரயோசனமற்றது. ஏனைய கட்சிகளுக்கும் அதே நிலைமையே ஏற்படும். நாட்டில் பல்வேறு பௌத்த மகா சங்கங்கள் காணப்படுகின்ற போதிலும் , மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் தொடர்பிலேயே அனைவரும் பேசுகின்றர். அதே போன்றுதான் இலங்கையிலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை மாத்திரமே ஸ்திரமான கட்சிகளாகவுள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனித்துச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க முடியும். எவ்வித பேதங்களும் இன்றி அனைவரையும் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இன, மத, மொழி பேதமின்றி அனைவருடனும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இந்நாட்டின் பிரஜையாவார். அவரின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் பலவீனத்தின் காரணமாகவே நாடு இந்த நிலைமையை அடைந்துள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் அவருக்கு இங்கு வசிப் பதற்கான உரிமை காணப்படுகிறது.

அதற்கமைய நாட்டின் தலைவர்கள் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here