22 ஆவது திருத்தம் ;அக்டோபர் 6-7 இல் விவாதம்

0
158

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் தலைமையில் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது.

மேற்படி திருத்தம் தொடர்பாக வாய்மொழி கேள்விகளுக்கு திங்கட்கிழமை (3) ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here