’27 டொக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்’

0
252

பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா, ‘நான் இறக்கவில்லை; சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டொக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல்கள் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து, அதில், ‘சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியம்.

அது உண்மையில் பிரபஞ்ச ஒழுங்குமுறை. பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் மேலும் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைக்கிறது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here