300 கிலோகிராம் ஹெரோயினுடன் 10 பேர் கைது

0
152

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் பின்னரே குறித்த நபர்கள் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடற்படை, பொலிஸார் இணைந்து இந்த சோதனையை முன்னெடுத்ததாகத் தெரிய வருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு மீன்பிடி படகுகள் மற்றும் சிறிய ரக படகொன்றும் பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here