மந்தபோஷணையில் இலங்கை இரண்டாமிடம்

0
213

தெற்காசியாவில் அதிக மந்தபோஷணையை எதிர்நோக்கும் நாடுகளில் இலங்கை 2ஆவது இடத்தில் காணப்படுவதாகவும் அண்மையில் யுனிசெப் (UNICEF) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..

“இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார் மத்தியில் மந்தபோஷணை” என்ற தலைப்பில் சபை ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் மத்தியில் உயரத்துக்கு ஏற்ற எடை இன்மை மற்றும் வயதுக்கு ஏற்ற உயரம் இன்மை போன்ற நிலைமை அதிகம் காணப்படுவது கடந்த காலத்தில் அறிக்கையிடப்பட்டிருப்பதாகவும், இந்த நிலைமை எதிர்காலத்தில் தொடர்ந்தும் காணப்பட்டால் சுகாதார நிலைமை மற்றும் கல்வி நடவடிக்கைகள் என்பன பாதிப்படையும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here